எத்தன வர்ஷம் ஆனாலும் திருந்தவே மாட்டோம் !!
நேத்துல இருந்து எல்லாரும் profile picture மாத்திட்டு இருகாங்க. சரி அவிங்க தான் அப்படி பண்றாங்கனா, இன்னைக்கு ஒரு பக்கி கேக்குது,"ஏன் அக்கா நீங்க இன்னும் மாத்தாம இருக்கிங்கனு". நீ ஏன் தம்பி மாத்துனனு கேட்டா, எல்லாரும் மாத்துனாங்க நானும் மாத்திட்டேன் நு சொல்லுது பயபுள்ள !! அவன பொருத்தவரைக்கும் digitalindia நு ஒரு வார்த்தைய தெரிஞ்சுவெச்சுகிட்டு ஒலட்டுது பக்கி !! ஒரு விஷயத்த முழுசா தெரிஞ்சுக்காம புரிஞ்சுக்காம ஆராஞ்சு பாக்கம இப்டி தான் இருக்கும்னு நாமலே முடிவு பண்ணிக்கறோம். அந்த விஷயத்தோட சாதகங்கள் பாதகங்கள் ல யோசிக்க கூட நாம நேரம் ஒதுகறது இல்ல !
ஏன்,எதுக்கு னு யோசிக்காம எல்லாரும் பண்றாங்க நானும் பண்றேன்னு பல காரியங்கள பண்ணி தான் இப்டி உருபடாம இருக்கோம். ஏன் பொறியியல் துறை தேர்ந்தெடுத்தோம்னு நம்ம கிட்ட யாராது கேட்டா,சொல்றதுக்கு பதில் இல்ல. எல்லாரும் எடுத்தாங்க நானும் எடுத்தேன்னு தான் சொல்லுவோம். சரி சேந்தது தான் சேந்தோம், ஒழுங்கா படிச்சோமா? அதும் இல்ல !! assignment-ல இருந்து ப்ராஜெக்ட் வரைக்கும் எல்லாமே ஈயடிச்சான் காப்பி தான் !! படிச்சு முடிச்சு வெளில வந்து என்ன படிச்சோம் நு யோசிச்சா பெருசா ஒன்னும் இல்லைனு தான் தோணுது.
நம்மல பெத்தவங்க காச கொட்டி நமக்கு அறிவும்,அனுபவமும் கெடைக்கணும் நு படிக்க வெக்கறாங்க ! ஆனா என்னத்த படிச்சாலும் அரவேக்கடவே தான் இருப்போம்னா என்ன பண்றது !!
போன தலைமுறை ல தான் தவற விட்டுடோம் இந்த தலைமுறையாது நல்லார்க்கனும் னு படிக்க வெக்கறாங்க, ஆனா நாம ஆட்டு மந்தைங்கலாவே தான் இருக்கோம் !! அறிவு வளந்துச்சான்னு பாத்தா அதையும் காணோம், நாம பண்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏன் எதுக்கு யோசிச்சு பண்ற அளவுக்கு பக்குவம் வந்துச்சான்னு பாத்தா அந்த கருமத்தையும் காணோம். கடைசி வரைக்கும் இப்புடியே தான் இருப்போம் போல படிச்ச முட்டாளுங்களா !!
போங்கடா நீங்களும் உங்க பட்டமும் !!